Tuesday, 27 September 2016

நெருப்புடா

கணினி யுகத்தில் 
கண்ணகி பிறந்து 
மதுரையை எரித்திருந்தால் 
கூறியிருப்பாள் 
"நெருப்புடா "

Monday, 26 September 2016

ஆசிரியர்கள்

காலம் முழுவதும் 
கற்றுக்கொண்டு 
கற்பூரங்களை காட்டுத்தீக்களாகும் 
அரிய கலையை 
அறிந்தவர்கள் ஆசிரியர்கள் 

குடிசையில் வாழ்பவனையும் 
குடியரசு தலைவராக்கும் 
வல்லமை உடையவர்கள் 
ஆசிரியர்கள் 

கடமையை செய் 
பலனை எதிர்பார்க்காதே 
என்னும் கோட்பாட்டை 
கொள்கையாக கொண்டதினால் 
என்னவோ 
பிரதிபலன் பாராமல் 
பணியாற்றுகின்றனர் 

எட்டா உயரத்தையும் 
எட்டுவதற்கு  ஏணியாய் 
இருக்கின்றனர் 

கடமையையும் கண்ணியத்தியும்
கடைபிடித்து 
கம்பிரமாய் கரம்பிடித்து 
ஒழுக்கத்தை ஓம்பவைத்தனர்

அன்போடு அரவணைத்தனர் 
மாற்றாந்தாயை 
வேட்கையோடு வழிகாட்டினார் 
கலங்கரை விளக்கம் போல் 

மழை

காலையிலையே காயவைத்த 
துணிகள் 
காயாமல் இருந்தன 
மழை பெய்து கொண்டிருப்பதால்

Saturday, 24 September 2016

கலியுகம்

பரிணாம வளர்ச்சியின் 
பயனோ என்னவோ 
கட்டிட காடுக்குள்
வாழ கற்றுக்கொண்டான் 
மனிதன் 

நவீன யுகத்துக்கு 
உலகம் நகர்ந்து விட்டதால் 
உலகம் நரகமாயின 
நகரும் உயிரினங்களுக்கு 

யானை

கனமாக உள்ளதால் என்னவோ 
மனம் கனக்கிறது 
கணநேரத்தில்
ரயில் மோதி
மாய்ப்பதால் 

பாசப்பிணைப்பினை பார்த்து 
மனம் பாடாய் படுகிறது 
தாய் யானை 
தன் குட்டியை 
பிரியாமல்  போராட்டம் நடத்துவதால் 

எல்லை தாண்டி
 நம் எல்லைக்குள் 
வந்துவிட்டதாக  பிதற்றுகிறோம் 
ஆறறிவு  இருந்தும் 
அறியாமையோடு 

மனிதனுக்கு மண்டியிடாமல் 
முரண்டு பிடித்தால் 
மதம் பிடித்ததாக கூறுகின்றனர் 
மதத்தில் மூழ்கிய மனிதர்கள் 

அவற்றின் வாழ்விடங்களை 
அழித்து வசிப்பிடங்கள் 
அமைத்து நிம்மதி கொள்கிறோம் 
அவற்றை கொன்று 

கடைசியில்
எல்லைகள்  சுருங்கி 
எல்லைகள் அற்று 
நாடோடிகளாய் 
யானைகள் 

I WROTE THIS POEM LAST MONTH TO PUBLISH IN THE MONTHLY MAGAZINE RUN BY ANNA HOCKEY TEAM NAMED  "வளைகோல் மலர்கள் " . THEY PUBLISHED THIS POEM IN THEIR MAGAZINE, LAST MONTH . THEY ALSO APPRECIATED ME WITH 100 RS CASH AMOUNT . I  REALLY WANT TO APPRECIATE MY HOCKEY TEAM WHO WERE DOING A LOT OF THINGS TO IMPROVE THE TEAMMATES .

AN APPLAUSE TO MY  HOCKEY TEAM FOR MOTIVATING ALL US IN EACH AND EVERY TASK .

விடா முயற்சி

மரத்தில் இருந்து தாவிய 
அணில் 
தவறி விழுந்து 
உயிர் நீத்தது என 
நினைத்தேன்
மகிழ்ச்சியோடு
துள்ளி குதித்தது 
மீண்டும் மரம் எற 

கற்றல்


கற்றுக்கொண்டேஇரு 
கற்றலும் கற்பிக்கும் 
வாழ்க்கையில் பாடங்களாய்

காதல்



அலை அலையாய் நீ
அடித்து செல்கிறேன் நான் 
உன் காதல் என்னும் வெள்ளத்தில் 


கவலைகளும் கலைந்து போகும்  
கலையாய் நீ இருப்பதால் 

மலை போன்ற பிணி கூட 
பனி போல ஆகுமே 
பக்கத்தில் நீ இருப்பதால் 


The above are some of the poems which I had written a long time ago on the Topic love . 

Wednesday, 21 September 2016

பாலாறு

பருவ  மழை  பெய்தும்
கானல் நீராகின
பாலாற்றில் வெள்ளம்