Monday, 26 September 2016

ஆசிரியர்கள்

காலம் முழுவதும் 
கற்றுக்கொண்டு 
கற்பூரங்களை காட்டுத்தீக்களாகும் 
அரிய கலையை 
அறிந்தவர்கள் ஆசிரியர்கள் 

குடிசையில் வாழ்பவனையும் 
குடியரசு தலைவராக்கும் 
வல்லமை உடையவர்கள் 
ஆசிரியர்கள் 

கடமையை செய் 
பலனை எதிர்பார்க்காதே 
என்னும் கோட்பாட்டை 
கொள்கையாக கொண்டதினால் 
என்னவோ 
பிரதிபலன் பாராமல் 
பணியாற்றுகின்றனர் 

எட்டா உயரத்தையும் 
எட்டுவதற்கு  ஏணியாய் 
இருக்கின்றனர் 

கடமையையும் கண்ணியத்தியும்
கடைபிடித்து 
கம்பிரமாய் கரம்பிடித்து 
ஒழுக்கத்தை ஓம்பவைத்தனர்

அன்போடு அரவணைத்தனர் 
மாற்றாந்தாயை 
வேட்கையோடு வழிகாட்டினார் 
கலங்கரை விளக்கம் போல் 

No comments:

Post a Comment