வேறு வழியில்லை விலகியே ஆக வேண்டும்
விதியினால் அல்ல
நான் செய்த வினையினால்.
வளைந்து வளைந்து செல்லும் நதிகளை போல
சென்றாலும்
சென்றைடையும் இலக்கு ஒன்று தான்
நாட்களையும் நகரங்களையும் கடந்தாக வேண்டும்
கஷ்டங்களால் களைப்படையக்கூடும்
வற்றி விடலாம் என் தேகம்
வேட்கை என்னும் குருதி குறைந்தால்
நெஞ்சுறுதியுடன் நகர்வேன்
நெடுநாளைக்கு பிறகு
நெடுந்தொலைவில்
நதி கடலை சந்திப்பதை போல்
நானும் உன்னை சங்கமிப்பேன்.
No comments:
Post a Comment